விருப்பங்கள்

Monday, February 28, 2011

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்

Friday, February 18, 2011

கம்பியூட்டர்களின் முப்பாட்டன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

தமிழ் சி என் என் வலைத்தளத்திலிருந்து

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன. 

1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.

1949 மே மாதம் 6ம் திகதி இது முதற்தடவையாகப் பாவனைக்கு வந்தது. இன்றைய நவீன கம்பியூட்டர்கள் இவ்வாறான 30 மில்லியன் கட்டளைகளை நிறைவேற்றக்கூடியவை. 

இருப்பினும் இன்றைய கம்பியூட்டர்களுக்கு மூல காரணியாக அமைந்த அன்றைய கணினி இயந்திரம் அந்த கால கட்டத்தின் புரட்சிகரமான கணிப்பொறியாகும். இன்றைய கம்பியூட்டர்களை விட அன்றைய இயந்திரங்கள் 50000 மடங்கு மெதுவானவை. 

அவற்றின் நினைவுப் பெட்டகப் பகுதியை மட்டும் வைத்திருப்பதற்கு தனியான அறையொன்று தேவைப்பட்டது. அவை 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவையாகக் காணப்பட்டன. 



இருந்தாலும் அந்த கால கணிப்பொறி இயந்திரங்களை விட இவை 1500 மடங்கு வேகமானவை. பல வாரங்களுக்குத் தரவுகளைச் சேமித்து வைக்க்கூடியவை. அந்த கால கணினிகள் பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பாதுகாத்து வைக்கப்படடுள்ளன. 

நவீன கம்பியூட்டர்களின் வழித்தோன்றல் இங்கிருந்து தான் ஆரம்பமாகின்றது. இவை இன்றைய கம்பியூட்டர்களின் முப்பாட்டன்கள் என்று நூதனசாலை அதிகாரயொருவர் வர்ணித்துள்ளார். 

அந்தகால கணிப்பொறியொன்றை வைத்திருக்க 215 சதுர அடி நிலப்பரப்புத் தேவைப்பட்டது. 3000 வேல்வுகளை அது கொண்டிருந்தது. ஆனால் இன்றை நவீன மடிக் கணினி யொன்று இலட்சக்கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது. 

கம்பியூட்டர் தலைமுறையின் நினைவாக இது பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது.

நன்றி தமிழ் சி என் என்  

பென் டிரைவை எவ்வளவு நாளைக்குப் பாவிக்கலாம்?

தமிழ் சி என் என் வலைத்தளத்திலிருந்து.....


உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? 

ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. 

இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். 

அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். 

அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. 

எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும். 

கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். 

உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.



நன்றி தமிழ் சி என் என்  

Thursday, February 17, 2011

The History of Aviation, Part 1 of 6

The History of Aviation, Part 2 of 6

The History of Aviation, Part 3 of 6

The History of Aviation, Part 4 of 6

The History of Aviation, Part 5 of 6

The History of Aviation, Part 6 of 6

History of Flight part 1

History of Flight part 2

Flight The Pioneer Era 1900 to 1914

Failed Attempts of Flight

First Flight Attempts

Early Flight (b&w, silent, 16mm) Vintage Films

WRIGHT BROTHERS FIRST FLIGHT

lollu sabha vaanatha pola 1

lollu sabha - vaanatha pola 2

lollu sabha - vaanatha pola 3

lollu sabha - vaanatha pola 4

Lollu Sabha - Chandramukhi(Sappamukhi)1

Lollu Sabha - Chandramukhi(Sappamukhi)2

Lollu Sabha - Bakery Part-1

Lollu Sabha - Bakery Part-2

Lollu Sabha - Bakery Part-3

Sunday, February 13, 2011

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 1

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 2

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 3

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 4

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 5

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 6

Neeya Naana Management vs people Vijay Tv Shows22 03 2009 Part 7

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 1

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 2

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 3

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 4

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 5

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 6

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 7

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 8

NEEYA NAANA 8.2.09 ( mind vs heart ) PRT 9

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 1

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 2

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 3

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 4

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 5

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 6

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 7

Vijay Tv Neeya Naana 25-05-2009 Part 8

Friday, February 11, 2011

Pathiluku Pathil Tamil Panchathanthira kathai   Saromama Kids world ...

Nithaname Prathanam Tamil Animated Story-kidsone

Singatthai Kaapaatriya Eli Tamil Animated Story

Nariyum Thiratchai Thottamum Tamil Animated Story

Thoppi Viyaabari (Cap Marchant - Tamil Animated Story)

Otrumaiye periya balam Tamil animated story

Poi Solbavarai Yaarum Nambamaattaanga (Boy & Wolf - Tamil Animated Story)

Vandu Chindu stories - நரியும் குரங்குகளும் - Low Spees - Fox and the Mo...

தேவதை கதைகள் ஆஞ்சலும் கிரெட்டும்

தேவதை கதைகள் கடல் கன்னி

ஸ்னோட்டும் குள்ளர்களும்

முல்லா கதைகள் - எருதுச்சண்டை

முல்லா கதைகள் - முல்லா ஒரு காப்பாளர்

முல்லா கதைகள் - இரகசிய வியாபாரம்

முல்லா கதைகள் - ஆயிரம் நாணயங்கள்

முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம்

கிளி கதை, Parrot Story

நாய் கதை, Dog Story,

தாகம் தணிந்த காகம் கதை Crow Story

Peraasai Perum Nastam (Duck And The Golden eggs) Tamil Animated stoty

Inraiya Semippu Naalaiya Thevai (Ants Tamil Animated Story)

Irupathai Kondu Sirapudan Vaazha Vendum Tamil Animated Story

Edhayum-Yosikamal-Seyyakoodathu Tamil Animated Story

Kadalai Viayapari_cutetamil.net

Kakamum Puravum cutetamil.net

Vayaadi Vaathu cutetamil.net

Nalla Nannapan cutetamil.net

Perumai ulla Muyal cutetamil.net

Muddaal Kaakam cutetamil.net

Tamil Alphabet - Part 1

Tamil Nursery - Pamparam

Tamil Nursery - Amma Ingaey Va

Mambalam

Amma Inge Vaa Vaa - Tamil

Tamil Rhymes,Chellame Chellam, Pappa Pattu: Ana avanna

Dosai Amma Dosai

Kuva kuva Vaathu

Chellame Chellam, Pappa Pattu, Tamil Rhymes: Koondukili

Tamil Rhymes,Chellame Chellam,Pappa Pattu: Deepavali

Ammupappa - Tamil Nursery Rhymes - asai asai paapa paatu

Ammupappa - Tamil Nursery Rhymes - asai asai paapa paatu

Ammupappa - tamil nursery rhymes amma paapa paatu

பாரதியார் - ஓடி விளையாடு பாப்பா

நிலா நிலா ஓடி வா - Nila Nila Odi Vaa

Monday, February 7, 2011

Nanna Neeya - fat vs lean peoples prt 1

Nanna Neeya - fat vs lean peoples prt 2

Nanna Neeya - fat vs lean peoples prt 3

Nanna Neeya - fat vs lean peoples prt 4.

Nanna Neeya - fat vs lean peoples prt 5

Nanna Neeya - fat vs lean peoples prt 6.avi

neeya naana about Junior vs. Senior part 1

neeya naana about Junior vs. Senior part 2

neeya naana about Junior vs. Senior part 3

neeya naana about Junior vs. Senior part 4

neeya naana about Junior vs. Senior part 5

neeya naana about Junior vs. Senior part 6

vijay awards 2010 part 1

vijay awards 2010 part 2

vijay awards 2010 part 3

vijay awards 2010 part 4

vijay awards 2010 part 5

vijay awards 2010 part 6

vijay awards 2010 part 7

vijay awards 2010 part 8

vijay awards 2010 part 9

vijay awards 2010 part 10

Vijay Awards Part 12.wmv

vijay awards 2010 part 11

vijay awards 2010 part 14

vijay awards 2010 part 15

vijay awards 2010 part 16

vijay awards 2010 part 17

Vijay Awards Part 18.wmv

Vijay Awards Part 19.wmv

Genocide against tamils in Srilanka documented by vaiko part 1

Genocide against tamils in Srilanka documented by vaiko part 2

Genocide against tamils in Srilanka documented by vaiko part 3

Genocide against tamils in Srilanka documented by vaiko part 4

Genocide against tamils in Srilanka documented by vaiko part 5

Friday, February 4, 2011

Suryavudan Oru Kodi Part 1

Suryavudan Oru Kodi Part 2

Suryavudan Oru Kodi Part 3

Suryavudan Oru Kodi Part 4

Suryavudan Oru Kodi Part 5

Suryavudan Oru Kodi Part 6

Suryavudan Oru Kodi Part 7

Suryavudan Oru Kodi Part 8

Suryavudan Oru Kodi Part 9

suryavudan orukodi part 10

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 1

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 2

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 3

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 4

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 5

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 6

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 7

Neeya Naana Vijay Tv Show Husband vs Wife Part 8

Tuesday, February 1, 2011

சுய இன்பம் ஆபத்தா?

நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.

காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.

இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை

இப்போதைய இளைஞர்களுக்குப் பிடித்த பெண்கள்



நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே, உருப்படியா ஒரு வேலையும் பார்க்கத் தெரியலே, புத்திசாலித்தனமா நடக்கத் தெரியுதா, விவரமா இருக்கத் தெரியுதா என்ற வசனங்களும், வசவுகளும், 80களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சர்வ சாதாரணமாக ஒலித்த ஒன்று. ஆனால் இன்று அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

5 வயதுப் பையனிடம் போய் பேசி நல்லபடியாக மீண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பேசுகிறார்கள் இக்காலத்துப் பொடியர்களே. அப்படி இருக்கையில் இளைஞர் குலம் எப்படி தீயாக இருக்கும்.

இருக்கிறது. செக்ஸ் மட்டுமே இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்டது.

ஒரு பெண் ஆணைக் கவர முன்பெல்லாம் அழகுதான் முக்கியமாக இருந்தது.

சேலையில் வரும் பெண்களை சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு மாடர்ன் டிரஸ் ஓ.கே.வாக இருக்கும். கவர்ச்சிகரமான உடைகளை விட சிம்பிளான உடையில்தான் நீ தேவதை போல இருக்கிறாய் என்று கூறுவோரும் உண்டு. இந்த எட்டு கெஜ புடவையைத் தூக்கிப் போட்டு விட்டு ஜில்லென்று ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்போரும் உண்டு.

சிலருக்கு பெண்களின் கண்கள் பிடிக்கும். கண்ணை வைத்து ஏகப்பட்ட கவிதைகளையும் வடித்துத் தள்ளுவார்கள். சிலருக்கு மூக்கு பிடிக்கும். சிலருக்கு உதடு பிடிக்கும். உன் காது இருக்கே, அதுலதான் கவர்ச்சியே இருக்கு என்று 'கலாய்ப்போரும்' உண்டு.

பெண்களின் இடுப்புக்கு எது எதையோ உதாரணம் காட்டி கவிதைகளையும், வசனங்களையும் வடித்து விட்டது இந்த ஆண்குலம். இடுப்பழகை வர்ணிக்க அவர்களுக்கு வார்த்தைகளும் போதாது. அந்தக் காலத்தில் மின்னல் இடை என்றார்கள், இந்தக் காலத்தில் இஞ்சி இடுப்பாக்கி விட்டார்கள்.

சிலருக்கு பெண்களின் கால்கள் பிடிக்கும். பெண்களின் வாளிப்பான கைகளை சிலர் ஆசையாக வர்ணிப்பார்கள். சிலருக்கு முன்னழகு பிடிக்கும், சிலருக்குப் பின்னழகு பிடிக்கும்.

இதெல்லாம் ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும்போது மன லேபில் 'டிஸக்சன்' செய்யும் பொதுவான விஷயங்கள். ஆனால் இக்காலத்து இளைஞர்களுக்கு பெண்களிடம் இன்னொரு விஷயம்தான் மிக மிகப் பிடித்திருக்கிறதாம். அது - பணம்.

செக்ஸியான + சவுகரியமான வேலையில் உள்ள பெண்ணைத்தான் இப்போதைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறதாம். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த டிரண்ட் வந்து ரொம்ப காலமாகி விட்டது.

உடல் ரீதியான கவர்ச்சிக்கு ஆண்கள் முக்கியத்துவம் தரும் அதே வேளையில், கை நிறைய சம்பாதிக்கும், நன்கு படித்த பெண்கள்தான் தங்களுக்கு 'சேஃப்' என்கிறார்கள்.

''செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே, எத்தனை நாளைக்குதான் செக்ஸிலேயே மூழ்கிக் கிடக்க முடியும். அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளது. அதற்கு பணம் தேவை. அந்தப் பணம் இருவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை வண்டியை சிரமமின்றி ஓட்ட முடியும். அதற்காகத்தான் சம்பாதிக்கும் பெண்ணை விரும்புகிறேன்.

அவர் என்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் இன்னும் சந்தோஷம். அதேசமயம், வெறும் பணத்துக்காக மட்டும் நான் பெண்ணை விரும்புவதில்லை. கூடவே எனக்கேற்ற செக்ஸியான பெண்ணாகவும் அவர் இருக்க வேண்டும்'' என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், அக்கால இளைஞர்களைப் போல இப்போது யாரும் இல்லை. மிகப் பெரிய அளவிலான மன மாற்றம் இக்காலத்து இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. இது ஆரோக்கியமானது.

வெறும் செக்ஸ் வேலைக்கு ஆகாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். உடல் ரீதியான ஆர்வம், ஈடுபாடு, மோகம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போய் விடுகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதைத் தாண்டி பார்க்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கைக்கான தேவை புரிகிறது.

அவசரப்பட்டு விவாகரத்து செய்கிறார்கள், அவசர கோலத்தில் கல்யாணம் செய்கிறார்கள், வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றெல்லாம் இக்காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட பெரும்பாலானோர் அப்படி இல்லை.

ஒரு பெண்ணைப் பார்த்து இவள்தான் எனது மனைவி அல்லது காதலி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு அவளது உடல் அழகை மட்டுமல்லாமல், நமது பொருளாதார போராட்டங்களுக்கு இவள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பதையும் பார்க்கின்றனர் இளைஞர்கள்.

பெண்கள் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள் ஆண்கள் என்று இதை கூறி விட முடியாது. மாறாக, பொறுப்புடன் யோசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் அழகும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை ஆணும், இவனிடம் காணப்படும் வாட்டசாட்டம், வசீகரம் நிரந்தரமல்ல. வயதாகும்போது இவையும் சேர்ந்தே தளரும், தொய்வடையும் என்பதை ஆணும், பெண்ணும் புரிந்து வைத்துள்ளனர்.

ஆண்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் கூட 'மோகம் முப்பது, ஆசை அறுபது' என்பதை தூர வைத்து விட்டு அதற்குப் பிறகு வாழப் போகும் நீண்ட வருடங்களை வசந்தமாக வைத்துக் கொள்ள இவன் உதவுவானா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தவறல்ல. இப்படி இருவருமே திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு வாழக்கையைத் தொடங்கும்போது இருவரும் இணைந்து வாழும் காலம் நிச்சயம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரந்தரமாகும் என்கிறார்.