விருப்பங்கள்

Thursday, December 10, 2009

வேதாரண்யம் அருகே பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்தது: 9 குழந்தைகள்- ஆசிரியை பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

வேதாரண்யம், டிச. 3-






நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினத்தில் தேவி நர்சரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

தினமும் பள்ளிக்கூட வேன் கிராமங்களுக்கு சென்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு கொண்டு விடுவது வழக்கம்.

இன்று காலை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் வந்து கொண்டு இருந்தது. கத்திரிபுலம் என்ற ஊர் கோவில் குளம் அருகே வேன் திடீர் என நிலை தடுமாறி ஓடியது.

உடனே மாணவ- மாணவிகள் கூச்சல் போட்டனர். வேனை டிரைவர் பிரேக்போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் இருந்து விலகி குளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேன் முழுவதும் மூழ்கியது. வேனுக்குள் சிக்கிய குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்ததாலும், மூச்சு திணறலாலும், உயிருக்கு போராடினர். கிராம மக்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை மீட்டனர்.

ஆனால் அதற்குள் 9 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். இதில் 5 பேர் மாணவிகள், 4 பேர் மாணவர்கள். பள்ளி ஆசிரியை ஒருவரும் குளத்தில் பிணமாக மிதந்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 11 குழந்தைகளை உயிருடன் மீட்டனர்.

வேனில் 25 மாணவ- மாணவிகளும், 2 ஆசிரியர்களும் இருந்தனர். 5 குழந்தைகளையும் ஒரு ஆசிரியையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

வேன் குளத்தில் மூழ்கிய போது வேன் டிரைவர் கதவை திறந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே பள்ளியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகளும், ஆசிரியையும் பலியாகி உள்ளதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் முனிய நாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்கள்.

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

[ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2009, lanka sri]

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்சி செய்தி

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!


[ 08 டிசெம்பர் 2009, lanka sri. ]


சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும்.

தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம்.


இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ராக்கெட்டுகளைவிட பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த ராக்கெட்.



இந்த நிறுவனம் நாசாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி க்ஷிகிஷிமிவிஸி என்ற ராக்கெட்டை 2013-ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளது.


தற்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் ராக்கெட்டுகளை இயக்க ஆண்டு தோறும் 7.5 டன்கள் எரிபொருள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராக்கெட்டுகளை பயன்படுத்தினால் 0.3 டன்கள் எரிபொருள் மட்டுமே செலவாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணமும், எரிபொருளும் மிச்சமாகும்.


மற்ற ராக்கெட்டுகளின் ஆரம்பகட்ட உந்து வேகத்திலும் பிளாஸ்மா ராக்கெட் சிறப்புத் தன்மை உடையது. ஒரே உந்துதலுக்குப் பிறகு ஆண்டுக்கணக்கில் இயங்கும் திறன் பெற்றது. நீராவி மூலம் இயங்கும் இதன் என்ஜின் தண்ணீரை கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கிக் கொள்ளும். இதன் வேகமும் சாதாரண ராக்கெட்டுகளைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த என்ஜினின் வெப்பநிலை சூரியனின் உட்புற வெப்பநிலைக்கு நிகராக இருக்கும். இதனால் மற்ற பாகங்கள் உருகாமல் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.


இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ள ஆட் ஆஸ்ட்ரா நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி நிலையம், செயற்கை கோள்கள், எரிபொருள் மையங்கள் ஆகியவற்றின் தொழில்ட்பம் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.