விருப்பங்கள்

Friday, October 22, 2010

பா‌லிய‌ல் க‌ல்‌வி‌யி‌ன் அவ‌சிய‌ம்

      நமது இ‌ந்‌தியா‌வி‌ன் பார‌ம்ப‌ரியமே ஒருவனு‌க்கு ஒரு‌த்‌தி எ‌ன்பதுதா‌ன். வெ‌ளிநா‌ட்டின‌ர் பலரு‌ம் பா‌ர்‌த்து ‌விய‌ந்த இ‌ந்த முறை ‌பி‌ன்ப‌ற்ற‌ப்‌ப‌ட்டு வரு‌ம் இ‌ந்‌தியா எ‌ச்ஐ‌வி பா‌தி‌ப்‌பி‌ல் இர‌ண்டா‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் எ‌வ்வளவு கே‌லி‌க்கு‌றியதாக உ‌ள்ளது.
இத‌ற்கு‌க் காரண‌ம் முறையான பா‌லிய‌ல் க‌ல்‌வி ‌கிடை‌க்காததுதா‌ன். sex இது கு‌றி‌த்து மரு‌த்துவ‌ர் டி காமராஜ் கூறுகை‌யி‌ல், பல நூ‌ற்றா‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே உலக அளவில் இந்தியா பாலியல் ரீதியாக முக்கிய பங்கினை அளித்திருக்கிறது. தி லேண்ட் ஆப் காமசூத்ரா என இ‌ந்‌தியா அழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பழைய கோவில்கள், புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் பாலியல் தொடர்பான கதைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன.
இதில் ஜாதியுடன், மூட நம்பிக்கைகளுடன் இணைந்தும் காணப்படுகின்றன. வாத்சாயனா பு‌த்தக‌த்தை இந்தியா மொ‌‌ழிக‌ள் பலவ‌ற்‌றி‌ல் மொழி பெயர்த்த‌தி‌ல் அதன் பயன்பாடு நன்கு இருக்கிறது. இது இல்லற வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்பது போன்ற செய்திகளைத் தருகிறது. ஜூஸ்பாட் எனும் நூலும் இதைப் போன்றே நல்ல பல அறிவியல் ரீதியான இல்லற வாழ்வின் செய்திகளைத் தருகிறது. ஆனால் வியப்பான செய்தி இந்தியாவில் இந்நூல்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. சட்டப்படி இந்தியாவில் படிக்கமுடியாது.
இன்னொரு வியப்பான செய்தி. பலரு‌ம் பாலியல் கல்வி கூடாது, பாலியல் பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அறிவியல் முறையில் பார்க்கத் தவறிய இந்திய அரசு பாலியல் தொடர்பாக பல செய்திகளுக்கு தடை செய்திருக்கிறது. ஆணுறுப்பையே வழிபடும் பிற்போக்காளர்களாக இருக்கும் நாம் பாலியல் பற்றி அறிவியல் ரீதியாக பேசக்கூடாது கலாச்சாரச் சீரழிவு என்கின்றனர். இவர்களெல்லாம் உண்மையாகவே ஆபாசங்களைத் தடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பெரும்பாலான ஆபாசங்கள் நடைமுறையில் இருப்பதைவிட திரைப்படங்களும், இன்டர் நெட்களும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதனை எதிர்க்க இவர்கள் தயாராக இல்லை.
அறிவியல் சிந்தனை வளரக்கூடாது என்பதில் தடையாக இருக்கிறார்கள். ஆனால், எ‌ச்ஐவி போன்ற நோய்கள் வந்த பிறகு இவர்களின் கருத்துகளெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன. அரசுக்கே ஒரு நெருக்கடி, கட்டாயம் வந்து பாலினம் பற்றி சொல்ல வேண்டியதாகிவிட்டது. இப்போது பாலியல் அறிவு தேவையான ஒன்று எனும் நிலைக்கு வந்து விட்டது. இதைத் தடுக்க முடியாது. அண்மையில் உலக பாலியல் மாநாட்டுக்காக ஸ்வீடன் சென்றிருந்தேன். உலகத்திற்கு ஒரு முன்னோடியான நாடாக பாலியல் துறையில் ஸ்வீடன் விளங்குகிறது.

ஒரு வாழ்க்கை இணையர் எப்படி இல்லற வாழ்வில் ஈடுபடுவது, முழுமையான மகிழ்ச்சியை பெறுவது, பாலியல் நோய்கள் வராமல் தடுப்பது உள்ளிட்ட பாலியல் அறிவியலை கல்வியாக 50 ஆண்டுகளுக்கும் முன்பே கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டது. ‌ஸ்‌வீட‌னி‌ல் இரு‌க்கு‌ம் த‌ற்போதைய தலைமுறை‌யின‌ர் பாலியல் அறிவினை பெற்றவ‌ர்களாக விளங்குகிறா‌ர்க‌ள். நாமும் அதைப்போல கொண்டு வர வேண்டும். அப்போது தவறான தூண்டுதல்கள் தடுக்கப்படும். நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
பாலியல் தொடர்பான பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டு பேசப்பட வேண்டும். இதனை மூடி மறைக்கக் கூடாது. இளைஞர்களை அப்போதுதான் நல்வழிக்கு கொண்டு வர முடியும். எச்ஐவி பாதிப்பு உலகில் அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியாதான். இ‌ன்னு‌ம் மூடிமறைத்து‌க் கொ‌ண்டே போனா‌ல் முதல் நிலைக்கு வந்துவிடும். மாணவர்களுக்கு பா‌லிய‌ல் க‌ல்‌வியை‌க் கற்றுத் தர வேண்டும். இது அவ‌சியமா‌கிறது.

Wednesday, October 20, 2010

காதலுக்கும், பாலுறவுக்கும் உள்ள தொடர்பு

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல - திருக்குறள். 

இந்தக் குறளையே பின்னாளில் வந்த சினிமா பாடலாசிரியர்கள் பலவாறாக தங்களின் கற்பனை நயங்களைச் சேர்த்து பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். `கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று ஒரு கவிஞர் எழுதினார்.


சரி, இதையெல்லாம் ஏன், இப்போது குறிப்பிடுகிறோம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போது விடயத்திற்கு வருவோம். முந்தைய கட்டுரையில் திருமணமான தம்பதிகள், குறிப்பிட்ட இடைவெளியில் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொண்டால், கணவன்-மனைவி இடையேயான அன்பு மாறாமல் உறவு நீடிக்கும் என்று கூறியிருந்தோம்.

அந்தவகையில் காதலும், பாலுறவும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு நண்பர் காதல் பற்றி மிகக் கடுமையாக சாடினார். ``காதல் தெய்வீகமானது. காதலிக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதெல்லம் சுத்தப்பொய். காதல் என்பதே பாலுறவுடன் மறைமுகத் தொடர்பு உடையது'' என்று கூறினார்.

அதையெல்லாம் மறுத்து, அவருக்கு விளக்கம் கொடுத்த நிலையில், அவர் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு நம்மால் மறுத்துப் பதில் அளிக்க இயலவில்லை. ``காதலித்து திருமணம் முடிந்த பின் பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் யாரேனும் உண்டா?

காதலின் உச்சக்கட்டம் அல்லது எல்லை பாலுறவுப் புணர்ச்சிதானே?'' என்று வினவியதற்கு ஆம் என்ற பதிலைத் தவிர நம்மிடம் வேறு பதில் இல்லை. ``இளம் பருவத்தில், 20 - 30 வயதுகளில் காதலித்து திருமணம் முடித்து, குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பின், 10 ஆண்டுகளுக்குப் பின் யோசித்தால், தாங்கள் செய்தது சுத்த போலித்தனம் என்பதை உணர்வார்கள்'' என்று அந்த நண்பர் உறுதிபடக் கூறினார்.

நண்பர் கூறியதை சரி என ஆமோதிக்க முடியா விட்டாலும், அந்தக் கூற்றின் யதார்த்தத்தை அலசிப் பார்ப்போம்.

Monday, October 18, 2010

பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?


பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?

பாலியல் தொடர்பான பல்வேறு விஷயங்களையும், எந்த மாதிரி தருணத்தில், எத்தகைய சூழ்நிலையில் பாலுறவை வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியெல்லாம் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் பால்வினை நோய் அல்லது எஸ்டிடி
(STDs - Sexually transmitted diseases or Venereal diseases - VD) குறித்து பார்ப்போம்.

பால்வினை நோயானது அனைத்து வயதினருக்கும், ஆண்கள் - பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. பால்வினை நோய் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதால் இந்நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக விடலைப் பருவத்தினருக்கும், இளம் வயதினருக்கும் இந்நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம். எனவே, இந்நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்தல் அவசியம். பால்வினை நோய் என்று தெரிந்த உடனேயே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்தல் அவசியம்.

சிகிச்சை எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், அதுவே ஆண்மையிழப்பு, மலட்டுத்தன்மை போன்ற விபரீத விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தி விடும் வாய்ப்புண்டு. பால்வினை நோயின் அடுத்தகட்டமே ஹெச்ஐவி / எய்ட்ஸ் என்பதாகும். ஹெச்ஐவி / எய்ட்ஸ் போன்றவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

பால்வினை நோய் இருப்பவர்களுடன் பாலுறவு கொள்வதால் மட்டுமே இந்நோய் பரவி விடுவதில்லை. இந்த தொற்று நோய் இருப்பவர்களுடன் ஸ்கின் டூ ஸ்கின் கான்டாக்ட் எனப்படும் தொடு உணர்ச்சி மூலமாகவும் பரவுகிறது. மேலும் பாலுறுப்புகள் மூலமாக உறவு கொள்ளாமல், வேறுவகையில் செக்ஸ் வைத்துக் கொண்டால் பால்வினை நோய் ஏற்படாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.

பால்வினை நோயை ஏற்படுத்துவது வைரஸ் அல்லது கிருமி என்பதால், உடலில் சிறு கீறல் இருந்தாலும் அதன் மூலம் இந்நோய் பரவி விடும் என்பதே உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கு பால்வினை நோய் இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

அதனால் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் மனைவி / கணவனுக்கு அவர்களை அறியாமலேயே எளிதில் நோயை பரப்பி விடுகிறார்கள். வேறு பலர் பால்வினை நோய் இருப்பது தெரிந்தாலும், மற்றவர்களிடம் சொல்வதில்லை.

பால்வினை நோய் வந்த பின் சிகிச்சை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், வரும் முன் காப்பதே சிறந்தது. பால்வினை நோயைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி ஆணுறை எனப்படும் காண்டம் உபயோகிப்பதே. தவிர, பெண்களாக இருப்பின் அவ்வப்போது மகப்பேறு மருத்துவரிடமும், ஆண்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவரிடமும் பரிசோதனை செய்து, நோய் இருப்பின் அதன் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க


குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.


இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.

அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

Friday, October 15, 2010

செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?


செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?


உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.


ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் செக்ஸ் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.

பாலுறவுக்குப் பிந்தைய செயலை விரும்பும் பெண்கள்


பொதுவாகவே பாலுறவு வைத்துக் கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் செயல்களை (ஃபோர் பிளே - Foreplay) அதிகம் பெண்கள் விரும்புவார்கள் என்று தெரிய வந்துள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பாலுறவு கொண்ட பின் அதிக நேரம் துணையுடன் செய்கைகள் வைத்திருப்பதை விரும்புவதாக
புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


சுமார் 5,600 ஜப்பான் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 50 விழுக்காடு பெண்கள், உறவு கொண்ட பின் நீண்ட நேரம் தங்கள் துணையுடன் செயல்பாட்டில் இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

44 விழுக்காட்டினர் அதிக நேரம் ஃபோர் பிளே-வை விரும்புவதாகவும், 38 விழுக்காட்டினர் அதிக நேரத்திற்கு பாலுறவுப் புணர்ச்சி கொள்வதை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். தங்களின் துணையுடன் வைத்துக் கொள்ளும் பாலுறவுப் புணர்ச்சி பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று 38.8 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை பாலுறவுக்கு முன் அதிக நேரம் ஃபோர்பிளே-வையும், உறவு கொண்ட பின்னர் செய்கைகளையும் விரும்புவதே முக்கியமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 விழுக்காடு பெண்கள் பாலுறவின் போது தங்கள் துணை சுயநலத்துடனேயே நடந்து கொள்வதாகக் கூறியிருப்பதாக அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

Thursday, October 14, 2010

பெண் ஏன் இப்படியானாள்?

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் 
வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women´s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.
பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….
இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?
இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:
“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!

!

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது. தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள
தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.


50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது. இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்

சர்க்கரை நோயு‌ம் ஆ‌ண்மை‌‌க் குறைவு‌ம்

றைவு‌ம்

சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாவிட்டால்
இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும், சுருங்கியும், சிதைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றன.

இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது. இன்னொரு முக்கிய விஷயம், சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத் தன்மை வராத நிலை ஏற்பட்டால் சர்க்கரை அதிகரித்துவிட்டது என்று பொருள். அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காட்டினருக்கு பின்னாளில் மாரடைப்பு வந்துள்ளது.

40 விழுக்காட்டினர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர். எனவே, ஆண்மைக் குறைவு என்ற பிரச்சனை வந்தாலே இதய நோய்க்கான பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதை அறியாமல் ஆண்மைக் குறைவுக்காக மட்டுமே சிகிச்சை செய்து கொண்டு திடீர் மாரடைப்பினால் உயிரைவிடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டாலே பெரும்பாலான பாலியல் பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம் என்ற விவரம் தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். இதனை த‌வி‌ர்‌க்கலா‌ம்.